டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்

Sep 27, 2019

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 16-வது கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

புதுடெல்லி,

காவிரியோடு தொடர்புடைய கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதன்படி தமிழக அரசு சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திருராமமூர்த்தி, காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களின் அணை நீர்மட்டம், மழை அளவு மற்றும் நீர்வரத்து புள்ளி விவரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த கூட்டத்துக்குப்பின் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் நிருபர்களிடம் பேசுகையில், ‘நீர்நிலைகளில் நீர்மட்ட அளவு திருப்திகரமாக உள்ளது. குழுவின் அடுத்த கூட்டம் அக்டோபர் 10-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும்’ என்று கூறினார்.

RELATED NEWS